Ashwin guard honour video
அஸ்வினுக்கு பிரியா விடை கொடுத்த இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து, திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனவுடன், அஸ்வின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் செய்தியாளர் சந்திப்புக்கு வந்து மூன்று வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
முன்னதாக, அஸ்வின் குறித்த பல உணர்ச்சிகரமான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. இந்நிலையில், இந்திய வீரர்கள் அஸ்வினுக்கு மரியாதை செலுத்துவது போன்ற காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளியில், இந்திய அணி வீரர்கள் இருபுறமும் வரிசையில் நிற்க, அஷ்வின் நடுவில் இருந்து மைதானத்திற்குச் சென்று, வெளியேறும்போது ரோஹித்தை கட்டிப்பிடித்தார். இதன் மூலம் இந்திய வீரர்கள் அஸ்வினுக்கு பிரியாவிடை கொடுத்ததாக கூறப்படுகிறது.