Ap vs mp
ரஞ்சி கோப்பை: மீண்டும் காயத்துடன் களமிறங்கிய விஹாரி; இலக்கை விரட்டும் ம.பி!
ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேசம் – ஆந்திரா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரிக்கி புயி 149, கரண் ஷிண்டே 110 ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஆட்டத்தின் தொடக்க நாளில் ஹனுமா விஹாரி பேட் செய்த போது ஆவேஷ் கான் வீசிய பந்து அவரது மணிக்கட்டை தாக்கியது. இதனால் 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
Related Cricket News on Ap vs mp
-
ரஞ்சி கோப்பை: காயம் காரணமாக இடது கையில் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி!
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஆந்திய அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி காயம் காரணமாக இடக்கையில் பேட்டிங் செய்தது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ...