Ipl auction: Cricket News & Match Updates
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
இந்தியா அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமானவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த தோனி, தற்போதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார். மேற்கொண்டு கடந்த ஆண்டே அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அன்கேப்ட் வீரராக சிஎஸ்கே அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்திருந்தாலும் தற்போதுவரை சமூக வலைதங்களில் இன்று வரை அவர் மிகவும் பிரபலமாக உள்ளார். ஆனால் அவர் சமூக வலைதளங்களில் பெரிதளவில் ஆர்வம் காட்டம் இருந்து வருவதன் மூலம் மற்ற வீரர்களைக் காட்டிலும் தனித்துவமாக இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி குறித்து அவ்வபோது வெளிவரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. Read More...