Baroda vs sikkim
SMAT 2024: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பரோடா அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பரோடா மற்றும் சிக்கிம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் டஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பரோடா அணிக்கு ஷஷ்வத் ராவத் - அபிமன்யூ சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய அபிமன்யூ சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்த நிலையில் அபிமன்யூ சிங் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஷஷ்வத் ராவத் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தர். பின்னர் இணைந்த பானு பணியா - ஷிவாலிக் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.