Danish malewar
ரஞ்சி கோப்பை 2025: கருண் நாயர் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது விதர்பா!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இத்தொடரின் காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு, மும்பை, கேரளா, ஹரியானா, குஜராத், சௌராஷ்டிரா, விதர்பா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட அணிகள் முன்னேறிவுள்ளன. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் விதர்பா மற்றும் தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் அதர்வா டைடே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆதித்யா தாக்ரே 5 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அணியின் மற்றொரு தொடக்க வீரரான துருவு ஷோரேவும் 26 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் விதர்பா அணி 44 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.