Gautam gmabhir
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அதன்பின் நடைபெற்ற தொடர்களில் சோபிக்க தவறியதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் பிசிசிஐ-யின் அரைவுரையை கேட்காமல் தனக்கும் காயம் இருப்பதாக கூறி, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஈடுபட்டார்.
இதன் காரணமாக பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியளிலிருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதுடன், தற்போது நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்தார்.