Icc champions trophy 2025: Cricket News & Match Updates
CT 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த முன்னாள் வீரர்கள்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் எந்தெந்த அணிகாள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற தங்கள் கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சில் ஒன்றி பங்கேற்ற இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய அணியின் முரளி விஜய், ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் பங்கர் மற்றும் தீப் தாஸ்குப்தா ஆகியோரும் தங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். Read More...