Maharashtra vs punjab
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: குல்கர்னி, சௌத்ரி அசத்தல்; அரையிறுதியில் மஹாராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அபிஷேக் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய மஹாராஷ்டிரா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும், அடுத்து வந்த சித்தேஷ் வீர் ரன்கள் ஏதுமின்றியும் என அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அர்ஷின் குல்கர்னி மற்றும் அங்கித் பவ்னே இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 145 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.