Pakistan vs sri lanka: Cricket News & Match Updates
எங்களை விட அவர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை விளையாடினர் - பாபர் ஆசாம்!
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முக்கியமான போட்டியான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக முகமது ரிஸ்வான் 86 ரன்களையும், இஃப்திகார் அகமது 47 ரன்களையும் குவித்து அசத்தினர். Read More...