Tamil cricket news: Cricket News & Match Updates
ஆல் டைம் ஒருநாள் அணியைத் தேர்வு செய்த ஆம்லா; ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் ஹாஷிம் ஆம்லா தனது ஆல்டைம் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ஆம்லா தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு அவர் தனது லெவனில் இடம் கொடுக்கவில்லை.
அவ்வாறு ஆம்லா தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்டை தேர்வு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களைக் குவித்த வீரராக உள்ளார். அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி வீரர்களில் ஒருவராக ஆடம் கில்கிறிஸ்ட் கருதப்படுகிறார். மேலும், மூன்றாவது இடத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய விராட் கோலியை தேர்வு செய்தார். Read More...