Pbks vs lsg: Cricket News & Match Updates
இம்பேக்ட் பிளேயர் சில நேரங்களில் வேலை செய்கிறது சில நேரங்களில் வேலை செய்வதில்லை - ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடரின் 38ஆவது போட்டியில் பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி அதிக ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியாக நடைபெற்று முடிந்திருக்கிறது. முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கையில் மேயர்ஸ், ஆயுஸ் பதோனி, ஸ்டாய்னிஸ் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வழங்கியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இரண்டாவது மொத்தத்தை 257 ரன்கள் என பதிவு செய்தது.
சாதனை இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி சீராக விளையாடிய பொழுதும், லக்னோ அணி நிர்ணயித்த இலக்கை தொடுவதற்கு அது போதுமானதாக அமையவில்லை. இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சாப் அணி 21 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் இருக்கின்றன. Read More...