Karun nair vijay hazare trophy 2024 25: Cricket News & Match Updates
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து மனம் திறந்த கருண் நாயர்!
நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை 2024-25 தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஆனாலும் அவரால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இத்தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த கருன் நாயர், எட்டு இன்னிங்ஸ்களில் 389.50 என்ற சராசரியில் 779 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். இதில் அவர் ஐந்து சதங்களையும் ஒரு அரை சதத்தையும் பதிவுசெய்தார்.
இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்விலும் கருண் நாயர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவர் அபாரமாக செயல்பட்ட நிலையிலும், அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கருண் நாயர் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். மேலும் இந்தியாக்கா விளையாட வேண்டும் என்ற பசி தன்னை சிறப்பாக செயல்பட தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார். Read More...