Ind vs eng: Cricket News & Match Updates
மீண்டும் ஷார்ட் பந்தில் விக்கெட்டை இழந்த ஸ்ரேயாஸ்; ரசிகர்கள் காட்டம்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ஷுப்மன் கில் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதை விட அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உலகக் கோப்பையில் முதல் முறையாக டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் இந்தியாவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரோஹித் சர்மாவுடன் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. Read More...